தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

2022ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களுக்கான 70வது தேசி திரைப்பட விருதுகளை வென்றவர்களைப் பற்றிய அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' என்ற பாடலுக்காக வென்றனர்.
அதில் நடன இயக்குனர் ஜானி, நடனப் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் காரணமாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருதை வாங்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அக்டோபர் 6 முதல் 11ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
70வது தேசிய விருதுகள் டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. போக்சோவில் கைதாகி விருதைப் பெறுவதற்காகவே இடைக்கால ஜாமீனில் வர உள்ள ஜானி, தேசிய விருதைப் பெறுவது சரியா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேசிய விருதுகள் குழு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பலரும் காத்திருக்கின்றனர்.




