பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் |
2022ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களுக்கான 70வது தேசி திரைப்பட விருதுகளை வென்றவர்களைப் பற்றிய அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' என்ற பாடலுக்காக வென்றனர்.
அதில் நடன இயக்குனர் ஜானி, நடனப் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் காரணமாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருதை வாங்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அக்டோபர் 6 முதல் 11ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
70வது தேசிய விருதுகள் டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. போக்சோவில் கைதாகி விருதைப் பெறுவதற்காகவே இடைக்கால ஜாமீனில் வர உள்ள ஜானி, தேசிய விருதைப் பெறுவது சரியா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேசிய விருதுகள் குழு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பலரும் காத்திருக்கின்றனர்.