தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

சினிமாவில் நடிப்பது வேறு அரசியலில் நடிப்பது வேறு. நடிகர் விஜய் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் ஜோசப் விஜய், தேவைப்பட்டால் நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றை இட்டுக் கொண்டு தன்னை இந்து மத ஆர்வலர் என்று காட்டிக் கொள்வார். ஆனால், சமீபத்தில் ஈவெ ராமசாமியின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார். மேலும், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
ஆனால், இன்று விஜய் சார்பாக இரண்டு பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. ஒன்று அவரது அரசியல் கட்சி மாநாட்டிற்காக நடைபெற்ற சிறப்பு பூஜை, மற்றொன்று அவரது கடைசி படமான விஜய் 69 படத்திற்கான பூஜை. தன்னை ஒரு நாத்திகவாதியாகவும், ஆத்திகவாதியாகவும் மாறி மாறி காட்டிக் கொள்ளும் விஜய் சார்பில் இன்று இரண்டு பூஜைகள் நடத்தப்பட்டது ஏன் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.




