இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் ஜாபர் இடுக்கி. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது ஜாபர் இடுக்கி மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி பரிந்துரைப்படி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கேரள அரசு நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு இப்போதும் முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் அனுப்பி உள்ளள புகார் மனுவில், ''சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றபோது ஓட்டல் அறையில் வைத்து ஜாபர் இடுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று இருந்தோம். அப்போது நடிகர் பவன் கல்யாண் உள்பட 2 பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி ஜாபர் இடுக்கி என்னை கட்டாயப்படுத்தினார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
விதவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.