வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்துக்குக் காரணம் தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் கேடிஆர் (முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகன்) என, தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் பெண் அமைச்சரான கொன்ட சுரேகா நேற்று (அக்.,2) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.
பல நடிகைகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியதற்கு கேடிஆர் தான் காரணம் என்றும் மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அமைச்சர் சுரேகா அப்படி பேசிய சில மணி நேரங்களிலேயே சமந்தா, நாகசைதன்யா மற்றும் நாகார்ஜுனா, அமலா, அவர்களது மகன் அகில் என நாகசைதன்யா குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
திரையுலகினரது தனிப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கிப் பேசுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வரும், காங்., எம்.பி., ராகுல் ஆகியோரும் உடனடியாக பெண் அமைச்சர் சுரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.




