ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது ; பக்கத்தில் நின்று பார்த்தது போல் பேசுகிறார்கள் : லோகேஷ் கனகராஜ் வருத்தம் | 'வேட்டையன்'-ஐ சமாளிப்பாரா 'மார்ட்டின்' ? | சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா? | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால் வருத்தப்பட்டேன் - சரண்யா துராடி | மீனா தொடருக்கு எண்ட் கார்டா? | பெண் அமைச்சர் மீது 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு : நாகார்ஜூனா தகவல் | 'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் |
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்துக்குக் காரணம் தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் கேடிஆர் (முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகன்) என, தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் பெண் அமைச்சரான கொன்ட சுரேகா நேற்று (அக்.,2) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.
பல நடிகைகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியதற்கு கேடிஆர் தான் காரணம் என்றும் மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அமைச்சர் சுரேகா அப்படி பேசிய சில மணி நேரங்களிலேயே சமந்தா, நாகசைதன்யா மற்றும் நாகார்ஜுனா, அமலா, அவர்களது மகன் அகில் என நாகசைதன்யா குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
திரையுலகினரது தனிப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கிப் பேசுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வரும், காங்., எம்.பி., ராகுல் ஆகியோரும் உடனடியாக பெண் அமைச்சர் சுரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.