குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் இன்று ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படம் தியேட்டர்களில் வெளியான போது கிளைமாக்ஸ் காட்சிகளில் குழப்பம் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. எந்த விஜய் 'குளோன்' என்பது பலருக்கும் புரியவில்லை. அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ''சில காட்சிகளை நீளம் காரணமாக வெட்டி எறிந்துவிட்டோம். தியேட்டர்களில் 3 மணி நேரமாக வெளியான படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் போது 3 மணி நேரம் 40 நிமிடங்களாக வரும்'' என்று தெரிவித்திருந்திருந்தார். ஆனால், ஓடிடி தளத்தில் தியேட்டர்களில் வெளியான அதே 3 மணி நேரப் படம்தான் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபு, “டைரக்டர்ஸ் கட்' வர வேண்டும் என்றால் 'லோட்டா விஎப்எக்ஸ்' நிறுவனத்திடமிருந்து முடிவுற்ற பிரதியைப் பெற வேண்டும். அவற்றை டெலிட்டட் காட்சிகளாகவோ அல்லது பிறகு ஓடிடி தளத்தில் சேர்க்கவோ இது குறித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறேன். இப்போதைக்கு இந்தப் பதிப்பை என்ஜாய் செய்யுங்கள்,” என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு முன்னர் குறிப்பிட்டது போல கூடுதலான அந்த 40 நிமிடக் காட்சிகளை விஎப்எக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற தயாரிப்பு நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும். அதன் வேலை முடிந்ததா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் சொல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகும் என்றால் அதைத் தயாரிப்பு நிறுவனம் செய்யுமா என்பதும் கேள்விக்குரியது.
படம் வெளியான போது ரசிகர்களை சமாளித்த வெங்கட் பிரபு, இப்போது மீண்டும் ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பது விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.