நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சில ஹிந்திப் படங்களில் நடித்த பின் 'தேவரா 1' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தமிழில் பேசி அசத்தினார். மும்பையில் வளர்ந்தாலும் ஜான்வி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்போது தெலுங்கில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சுந்தரத் தெலுங்கில் பேசி தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த 'தேவரா 1' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி அதிகக் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், “இந்த வார்த்தைகளை நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன். அதனால், இப்போதைக்கு உங்களுக்காக என்னிடம் இருந்து இந்த குறுஞ்செய்தி,” என வீடியோவைப் பதிவிட்டுப் பேசியுள்ளார்.
அதில், “என்னை 'ஜானு பாப்பா' என்று அன்புடன் அழைக்கும் அனைத்து தெலுங்கு ரசிகர்களுக்கும், குறிப்பாக என்டிஆர் சார் ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் என் மீது அன்பைப் பொழிவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். நீங்கள் அனைவரும் என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் முக்கியமானவர்கள். உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்த நான் மிகவும் கடினமாக உழைப்பேன். 'தேவரா' எனது முதல் படி,” எனப் பேசியுள்ளார்.