'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கலந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் எப்-2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எப்-3 என்கிற பெயரில் வெளியாகி அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ராணா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் பாலகிருஷ்ணா திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்ழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் இதற்கு அருகிலேயே நடந்து வருவதால் தனக்கு கிடைத்த இடைவெளி நேரத்தில் அவர் தனது நண்பரான வெங்கடேஷின் படப்பிடிப்பி தளத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.




