அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் |

தமிழில் 'நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், என் வழி தனி வழி, அச்சாரம்” உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர் பூனம் கவுர். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே தெலுங்கின் முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் மீது அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தார். அது மட்டுமல்லாது தற்போது ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் மீதும் குற்றம் சுமத்தி சில பேட்டிகளையும் கொடுத்திருந்தார். இவை ஓரிரு வருடங்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெலுங்கில் தற்போது நடன இயக்குனர் ஜானி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூனம் கவுர் அவரது எக்ஸ் தளத்தில், “திரிவிக்ரம் சீனிவாஸ் மீதான எனது புகாரை தெலுங்கு நடிகர் சங்கத்தினர் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால் நானும் மற்றும் பலரும் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்க மாட்டோம். நான் அமைதியாகப் புறக்கணிக்கப்பட்டேன். நான் இதைத் தலைவர்களிடமும் தெரிவித்திருந்தேன், ஆனால், எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. திரையுலகத்தில் உள்ள பெரியவர்கள் இயக்குனர் த்ரிவிக்ரமிடம் கேள்வி கேட்குமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு, ஜானி விவகாரம் குறித்து, “குற்றவாளி ஷேக் ஜானியை இனிமேல் மாஸ்டர் என்று அழைக்கக் கூடாது. 'மாஸ்டர்' என்ற வார்த்தைக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்,” என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




