'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

நடிகர் தனுஷ் பன்முகத் திறமை கொண்ட நபர். குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனராக பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றன. தற்போது இளைஞர்களை வைத்து ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து தனுஷ் உடனடியாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு 'இட்லி கடை ' என தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.