பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம், 'தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போன்று அரசு ஒரு கமிட்டி அமைத்து பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது' குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் “ஹேமா கமிட்டி விவகாரம் போல் தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால் பூதாகரமாக வெடித்திருக்கும். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படங்களில் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்னையை எதிர்கொண்டதில்லை” என்றார்.