‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில், குறிப்பாக விஜய் டிவியில் இருந்து பல பேர் வெள்ளித்திரையில் நுழைந்து நகைச்சுவை நடிகர்களாக, ஹீரோவாக தங்களுக்கு என ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னுதாரணம் என்றால் சந்தானம், சிவகார்த்திகேயனை சொல்லலாம். அதன்பிறகு தற்போது கவின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகராக மாறி வருகிறார்.
இதே போல விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றிய ரக்ஷன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவரது நண்பராக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தார். அவரது கதாபாத்திரமும் நகைச்சுவை கலந்த நடிப்பும் மிகவும் ரசிக்கும்படியாக வரவேற்பை பெற்றது.
ஆனால் அதற்கடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடிப்பார் என எதிர்பார்த்தால் தற்போது வரை இந்த நான்கு வருடங்களில் மறக்குமா நெஞ்சம் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரக்ஷன்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ என்கிற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல இந்த பாடலில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியருடன் இணைந்து அவர்களுக்கு இணையாக ரக்ஷன் நடனமாடியுள்ளார். அந்த அளவிற்கு ரக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த படத்தில் கிடைக்கும் வெளிச்சத்தை பயன்படுத்தி மீண்டும் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் ரக்ஷன் உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.