'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த மாதம் கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதுடன் பல பேர் தங்கள் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் வயநாடு பகுதியைச் சேர்ந்த சுருதி என்கிற பெண்ணும் ஒருவர். அந்த நிலச்சரிவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை ஒரே நேரத்தில் பறிகொடுத்து மிகப்பெரிய துயரத்திற்கு ஆளானார். அந்த சமயத்தில் அவருக்கு ஆதரவாக நின்றது அவரது நண்பரும், வருங்கால கணவருமான ஜென்சன் என்பவர் தான்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜென்சன், சுருதி மற்றும் சுருதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஒரு ஆம்னி வாகனத்தில் பயணித்த போது எதிர்பாராமல் ஒரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டிய ஜென்சன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து கேரளாவில் உள்ள மக்கள் பலரும் ஜென்சனுக்கு தங்களது இரங்கலையும் சுருதிக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி இந்த துயர நிகழ்வு குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டு சுருதிக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஜென்சனின் மறைவு மிகப்பெரிய சோகத்தை கொண்டு வந்துள்ளது. சுருதியின் வலி என்பது கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாதது. சுருதி மற்றும் ஜென்சனின் அன்பான குடும்பத்தினர் அனைவரும் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.