மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள திரையுலகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள அஜயண்டே ரெண்டாம் மோசனம் படம் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல நடிகர் ஆசிப் அலி நடித்துள்ள கிஷ்கிந்தா காண்டம், அங்கமாலி டைரிஸ் புகழ் ஆண்டனி வர்கீஸின் கொண்டல் ஆகிய படங்களுடன் நடிகர் ரகுமான் நடித்துள்ள பேட் பாய்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பேட் பாய்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷீலு ஆபிரகாம், நடிகர்கள் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, ஆண்டனி வர்கீஸ் மூவரும் சேர்ந்து ஓணம் பண்டிகைக்கு தங்கள் மூவரின் படங்கள் மட்டுமே வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி மற்ற சிறிய படங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைக்கும் விதமாக ஒரு அதிகார குழுவாக செயல்பட்டு வருகின்றனர் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப நாட்களாக மலையாள திரை உலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ஷீலு ஆபிரகாமின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமனம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.