பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! |
மலையாள திரையுலகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள அஜயண்டே ரெண்டாம் மோசனம் படம் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல நடிகர் ஆசிப் அலி நடித்துள்ள கிஷ்கிந்தா காண்டம், அங்கமாலி டைரிஸ் புகழ் ஆண்டனி வர்கீஸின் கொண்டல் ஆகிய படங்களுடன் நடிகர் ரகுமான் நடித்துள்ள பேட் பாய்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பேட் பாய்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷீலு ஆபிரகாம், நடிகர்கள் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, ஆண்டனி வர்கீஸ் மூவரும் சேர்ந்து ஓணம் பண்டிகைக்கு தங்கள் மூவரின் படங்கள் மட்டுமே வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி மற்ற சிறிய படங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைக்கும் விதமாக ஒரு அதிகார குழுவாக செயல்பட்டு வருகின்றனர் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப நாட்களாக மலையாள திரை உலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ஷீலு ஆபிரகாமின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமனம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.