ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
மலையாள திரையுலகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள அஜயண்டே ரெண்டாம் மோசனம் படம் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல நடிகர் ஆசிப் அலி நடித்துள்ள கிஷ்கிந்தா காண்டம், அங்கமாலி டைரிஸ் புகழ் ஆண்டனி வர்கீஸின் கொண்டல் ஆகிய படங்களுடன் நடிகர் ரகுமான் நடித்துள்ள பேட் பாய்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பேட் பாய்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷீலு ஆபிரகாம், நடிகர்கள் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, ஆண்டனி வர்கீஸ் மூவரும் சேர்ந்து ஓணம் பண்டிகைக்கு தங்கள் மூவரின் படங்கள் மட்டுமே வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி மற்ற சிறிய படங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைக்கும் விதமாக ஒரு அதிகார குழுவாக செயல்பட்டு வருகின்றனர் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப நாட்களாக மலையாள திரை உலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ஷீலு ஆபிரகாமின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமனம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.