கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதங்கள் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர்களில் சிலர் தலா 1 கோடி நிவாரண நிதியை அறிவித்தனர். தமிழ் நடிகர்களில் முதலாவதாக நடிகர் சிம்பு இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து 6 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
சிம்புவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், “ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்,” என எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
அதற்கு சிம்பு, “நன்றி பவன் கல்யாண் அவர்கள். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைவரும் விரைவில் நலமாக வேண்டுகிறேன்,” என பதில் நன்றி தெரிவித்துள்ளார்.