ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதங்கள் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர்களில் சிலர் தலா 1 கோடி நிவாரண நிதியை அறிவித்தனர். தமிழ் நடிகர்களில் முதலாவதாக நடிகர் சிம்பு இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து 6 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
சிம்புவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், “ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்,” என எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
அதற்கு சிம்பு, “நன்றி பவன் கல்யாண் அவர்கள். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைவரும் விரைவில் நலமாக வேண்டுகிறேன்,” என பதில் நன்றி தெரிவித்துள்ளார்.