பிளாஷ்பேக் : சரஸ்வதி சபதத்தின் இன்னொரு வெர்ஷன் | ஆபாச வீடியோ, அவதூறு பரப்பிய 73 பேர் அனுசுயா புகார் | தமிழுக்கு வரும் தெலுங்கு இளம் ஹீரோ | காதலரை மணந்தார் ‛பிக்பாஸ்' ஜூலி | பிரித்விராஜூக்கு வில்லனாக மலையாளத்தில் நுழைந்த கத்தி பட வில்லன் | ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் இதுதான் : விஜய்சேதுபதி | நிவின்பாலிக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி கண்டனம் | 'எல்சியு' : மொத்தமாக மூடிவிட்டாரா லோகேஷ் கனகராஜ் ? | கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய விஜய் : பொங்கல் விழா கொண்டாடாமல் போனது ஏன்? | 2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் வசூல் நிலவரம் |

தமிழில் ரஜினி, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளது.
அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் கார்த்திக் சுப்பராஜ் தொடங்கியுள்ளார். அதன்படி தனது அடுத்து படத்திற்கான கதையை நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளாராம். அவருக்கு கதை பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. சூர்யா படத்தை முடித்து வந்ததும் ஜெயம் ரவி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என தெரிகிறது.