2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழில் ரஜினி, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளது.
அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் கார்த்திக் சுப்பராஜ் தொடங்கியுள்ளார். அதன்படி தனது அடுத்து படத்திற்கான கதையை நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளாராம். அவருக்கு கதை பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. சூர்யா படத்தை முடித்து வந்ததும் ஜெயம் ரவி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என தெரிகிறது.