‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ |
தமிழில் ரஜினி, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளது.
அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் கார்த்திக் சுப்பராஜ் தொடங்கியுள்ளார். அதன்படி தனது அடுத்து படத்திற்கான கதையை நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளாராம். அவருக்கு கதை பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. சூர்யா படத்தை முடித்து வந்ததும் ஜெயம் ரவி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என தெரிகிறது.