ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர ஹிந்தியில் முதல் முறையாக நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில் இதில் மற்றொரு நாயாகியாக காஜல் அகர்வால் நடிக்க தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.