ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
'வாரிசு' கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் தனுஷ் ஜோடியாக 'குபேரா' படத்திலும், தெலுங்கில் 'புஷ்பா' படத்திலும், ஹிந்தியில் 'சிக்கந்தர், சாவா' படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு வாரங்களாக அவர் சமூக வலைத்தளங்களின் பக்கம் வரவில்லை. அவர் சிறிய விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் இந்தப் பக்கம் வந்து சிறிது நாட்களாகிவிட்டது. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டு, மருத்துவர்கள் சொன்னபடி வீட்டில் ஓய்வில் இருந்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இனி நான் சுறுசுறுப்பாக செயல்படுவேன். உங்களை கவனித்துக் கொள்வதில் எப்போதும் முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது, உடையக் கூடியது. நமக்கு நாளை கிடைக்குமா என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள்,” என்று தத்துவமாகவும் பதிவிட்டுள்ளார்.
அதோடு, “குறிப்பு' என்று சொல்லி, “நான் இப்போது லட்டுக்களை அதிகமாக சாப்பிடுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு லட்டு, லட்டுக்களை சாப்பிடுகிறதே…..கமா, ஆச்சரியக்குறி…என 'க்ரிஞ்ச்' ஆக யாரும் கமெண்ட் செய்யவில்லை என்பது ஆறுதல்.