சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

'வாரிசு' கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் தனுஷ் ஜோடியாக 'குபேரா' படத்திலும், தெலுங்கில் 'புஷ்பா' படத்திலும், ஹிந்தியில் 'சிக்கந்தர், சாவா' படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு வாரங்களாக அவர் சமூக வலைத்தளங்களின் பக்கம் வரவில்லை. அவர் சிறிய விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் இந்தப் பக்கம் வந்து சிறிது நாட்களாகிவிட்டது. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டு, மருத்துவர்கள் சொன்னபடி வீட்டில் ஓய்வில் இருந்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இனி நான் சுறுசுறுப்பாக செயல்படுவேன். உங்களை கவனித்துக் கொள்வதில் எப்போதும் முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது, உடையக் கூடியது. நமக்கு நாளை கிடைக்குமா என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள்,” என்று தத்துவமாகவும் பதிவிட்டுள்ளார்.
அதோடு, “குறிப்பு' என்று சொல்லி, “நான் இப்போது லட்டுக்களை அதிகமாக சாப்பிடுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு லட்டு, லட்டுக்களை சாப்பிடுகிறதே…..கமா, ஆச்சரியக்குறி…என 'க்ரிஞ்ச்' ஆக யாரும் கமெண்ட் செய்யவில்லை என்பது ஆறுதல்.