பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛வேட்டையன்' படம் அடுத்தமாதம் அக்., 10ம் தேதி திரைக்கு வருகிறது. ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போலீஸ் தொடர்புடைய கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து முதல்பாடலாக 'மனசிலாயோ' என்ற மலையாள ஸ்டைலிலான பாடலை வெளியிட்டுள்ளனர். சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் எழுதி உள்ள இந்த பாடலை மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளனர். அவரின் மகன் யுகேந்திரன், அனிருத் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து பாடி உள்ளனர். அதிரடி துள்ளல் பாடலாக மலையாள ஸ்டைலில் வெளியாகி உள்ள இந்த பாடலுக்கு ஒரு மணிநேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் யுடியூப் தளத்தில் கிடைத்தன.