'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மறைந்த பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவன். இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற 80,90- களில் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை பாடியவர். குறிப்பாக ரஜினியின் மாப்பிள்ளை, ஊர் காவலன், மிஸ்டர் பாரத், ரங்கா, படிக்காதவன், மனிதன் உள்ளிட்ட பல ரஜினி படங்களுக்கு பாடியுள்ளார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் இவரின் குரலை ரஜினி படத்திற்காக பயன்படுத்தி உள்ளனர்.
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து 'மனசிலாயோ' எனும் முதல் பாடல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று மாலை வெளியிடுகின்றனர். ஏ.ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி மலேசியா வாசுதேவன் குரலில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
சமீபகாலமாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். பம்பா பாக்யா, சாகுல் ஹமீது, பவதாரிணி ஆகியோரை தொடர்ந்து மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.