மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
மறைந்த பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவன். இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற 80,90- களில் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை பாடியவர். குறிப்பாக ரஜினியின் மாப்பிள்ளை, ஊர் காவலன், மிஸ்டர் பாரத், ரங்கா, படிக்காதவன், மனிதன் உள்ளிட்ட பல ரஜினி படங்களுக்கு பாடியுள்ளார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் இவரின் குரலை ரஜினி படத்திற்காக பயன்படுத்தி உள்ளனர்.
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து 'மனசிலாயோ' எனும் முதல் பாடல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று மாலை வெளியிடுகின்றனர். ஏ.ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி மலேசியா வாசுதேவன் குரலில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
சமீபகாலமாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். பம்பா பாக்யா, சாகுல் ஹமீது, பவதாரிணி ஆகியோரை தொடர்ந்து மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.