சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மறைந்த பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவன். இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற 80,90- களில் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை பாடியவர். குறிப்பாக ரஜினியின் மாப்பிள்ளை, ஊர் காவலன், மிஸ்டர் பாரத், ரங்கா, படிக்காதவன், மனிதன் உள்ளிட்ட பல ரஜினி படங்களுக்கு பாடியுள்ளார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் இவரின் குரலை ரஜினி படத்திற்காக பயன்படுத்தி உள்ளனர்.
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து 'மனசிலாயோ' எனும் முதல் பாடல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று மாலை வெளியிடுகின்றனர். ஏ.ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி மலேசியா வாசுதேவன் குரலில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
சமீபகாலமாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். பம்பா பாக்யா, சாகுல் ஹமீது, பவதாரிணி ஆகியோரை தொடர்ந்து மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.