லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

சமீபத்தில் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்களுக்கு குறிப்பாக நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதால் மலையாள திரையுலகமே கலகலத்து கிடக்கிறது. வாய்ப்புக்காக சமரசம் செய்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு பக்கம் என்றால் தங்களது திறமையால் வாய்ப்பு பெற்ற பெண்கள் சீனியர்கள் என்கிற கோதாவில் இருக்கும் ஆண்களால் ரொம்பவே மட்டமாக நடத்தப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது.
பெண் இயக்குனர் ரேவதி வர்மா இதை தான் அனுபவப்பூர்வமாக சந்தித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2006ல் ஜோதிகா, குஷ்பூ, சரிதா நடிப்பில் தமிழில் வெளியான ‛ஜூன் ஆர்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ரேவதி வர்மா. 2013ல் மலையாளத்தில் வெளியான ‛மேட் டாட்' என்கிற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லால் நடித்திருந்தார். அவரது நடிப்புத் திறமைக்காகவே இந்த கதாபாத்திரத்தில் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெண் என்பதாலேயே தன்னை அவர் மிகவும் மட்டமாக நடத்தியதாகவும் கூறியுள்ளார் ரேவதி வர்மா.
“குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் ஸ்டார்ட், ஆக்சன், கட் என்று குரலை உயர்த்தி பேசுவதை கூட பெண்களை அடக்கி வைத்தே பழக்கப்பட்டு விட்ட சமூகத்திலிருந்து வந்த நடிகர் லால் போன்ற ஆண் வர்க்கத்தினர் சிலர் விரும்புவதில்லை. அந்த படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய டைரக்ஷனில் நடிப்பது பற்றி அவர் பலரிடமும் கிண்டலாகவும் மட்டமாகவும் விமர்சித்து கூறிய வார்த்தைகள் என் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி விட்டன” என்று கூறியுள்ளார்.