24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! |
குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் தனது பாணியில் அரசியலை முன்வைத்து படத்தை இயக்கியவர் ராஜூ முருகன். இதையடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் பிறகு ராஜூ முருகன் இயக்கும் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எஸ். ஜே. சூர்யாவை சந்தித்து ராஜூ முருகன் கூறிய கதையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் எந்தவித அறிவிப்பின்றி ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கும் என்கிறார்கள்.