செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! | ரூ.100 கோடி வசூலித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' |
குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் தனது பாணியில் அரசியலை முன்வைத்து படத்தை இயக்கியவர் ராஜூ முருகன். இதையடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் பிறகு ராஜூ முருகன் இயக்கும் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எஸ். ஜே. சூர்யாவை சந்தித்து ராஜூ முருகன் கூறிய கதையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் எந்தவித அறிவிப்பின்றி ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கும் என்கிறார்கள்.