டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் |
அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ள கோட் படம் நாளை செப்., 5ல் உலகமெங்கும் வெளியாகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மீடியாக்களில் தோன்றி இப்படம் குறித்த புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு. அப்போது கோட் படம் குறித்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைக்கப்பட்டிருக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த் கேரக்டர் பற்றியும் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், இந்த கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த விஜயகாந்தின் கேரக்டரை பயன்படுத்தி உள்ளோம். கதைப்படி காவல்துறை உயர் அதிகாரியாக வரும் விஜயகாந்த், சிறிது நேரம் வந்தாலும் அவரது கம்பீரக் குரலில் ஒலிக்கும் அந்த வசனங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.