என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை(செப்., 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிகாலை சிறப்புக் காட்சிகளும் வெளிமாநிலங்களில் நடக்க உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்திவிட்டார்கள். தற்போது காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கோட் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அரசிடம் மனு அளித்து இருந்தது.
இந்நிலையில் படம் வெளியாகும் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக காலை காட்சிகள் 10:30 மணிக்கு மேல் தான் துவங்கும். நாளை மட்டும் காலை 9 மணிக்கே காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் காலை 9 மணிக்கு துவங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏஜிஎஸ் தரப்பில் இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு ஒரு நாளைக்கு அனுமதி வழங்கி உள்ளது.