ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் நாளை (செப்-5) வெளியாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து அவர் மங்காத்தா படத்தை இயக்கியபோதே அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் கழித்து அந்த நிகழ்வும் தற்போது நடந்துள்ளது. எல்லாம் இயக்குனர்களையும் போல இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்து வருகிறது. அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி இந்த கோட் படத்தின் கதையைக்கூட அவர் ரஜினிக்காகத்தான் எழுதியுள்ளார்.
இதில் ரஜினியின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷும் நடிப்பதாகத்தான் கதையை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் சில காரணங்களால் அப்படியே இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம்.
கடந்த வருடங்களில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சில சங்கடமான சூழல் காரணமாக இந்த இருவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை புரிந்து கொண்டு தான் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருப்பார் என்றே தெரிகிறது. இந்த படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக வெளியான தகவலை மேலே சொன்ன தகவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் வெங்கட் பிரபு கூறியிருப்பது சரிதான் என தெரிய வரும்.