ரஜினி, கமல் இணையும் படம் : இன்று பிரமோ படப்பிடிப்பு | 2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் |

இந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி. இந்தியாவில் உயர்ந்து விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். 'மீரா' என்ற படத்தில் மீராவாக நடித்தவர். இவரது வாழ்க்கை கதை சினிமாவாக தயாராகிறது. இதில் எம்எஸ் சுப்புலட்சுமியாக வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அவரது வாழ்க்கை மேடை நாடகமாக உருவாகிறது.
எழுத்தாளர் வி.எஸ்.வி.ரமணன் எழுதிய 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகத்தை தழுவி அதே பெயரில் இந்த நாடகம் உருவாகியுள்ளது. இதை பம்பாய் ஞானம் இயக்குகிறார். தக்ஷின் இசையமைக்கிறார். த்ரீ நிறுவனம் மற்றும் கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நாடகம் வரும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வாணி மகால் மற்றும் நாரத கான சபையில் நடைபெற உள்ளது. சுப்புலட்சுமியாக நாடக நடிகை லாவண்யா நடிக்கிறார்.




