டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
இந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி. இந்தியாவில் உயர்ந்து விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். 'மீரா' என்ற படத்தில் மீராவாக நடித்தவர். இவரது வாழ்க்கை கதை சினிமாவாக தயாராகிறது. இதில் எம்எஸ் சுப்புலட்சுமியாக வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அவரது வாழ்க்கை மேடை நாடகமாக உருவாகிறது.
எழுத்தாளர் வி.எஸ்.வி.ரமணன் எழுதிய 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகத்தை தழுவி அதே பெயரில் இந்த நாடகம் உருவாகியுள்ளது. இதை பம்பாய் ஞானம் இயக்குகிறார். தக்ஷின் இசையமைக்கிறார். த்ரீ நிறுவனம் மற்றும் கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நாடகம் வரும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வாணி மகால் மற்றும் நாரத கான சபையில் நடைபெற உள்ளது. சுப்புலட்சுமியாக நாடக நடிகை லாவண்யா நடிக்கிறார்.