எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் |

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த வகையில் 2024 - 2026ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. ஓட்டளிக்க உரிமையுள்ள 467 பேரில் 327 பேர் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான கே ராஜன் மீண்டும் வெற்றி பெற்றார். செயலாளராக கலைப்புலி சேகரன், துணைத் தலைவராக அந்தோணி தாஸ், பொருளாளராக தருண்குமார், துணை செயலாளராக நந்தகோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 16 பேர் செயற்குழு உறுப்பினர் ஆனார்கள்.




