22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
'ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்' என்ற தலைப்பில், உலகம் முழுக்க இசை கச்சேரி நடத்தி வருகிறார் ஸ்ரேயா. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் 6 இடங்களில் இசை கச்சேரி நடத்திய பாடகி ஸ்ரேயா கோஷல், கடைசியாக டில்லியில் கடந்த மாதம் 10ம் தேதி நடத்தினார். இதையடுத்து கோல்கட்டாவில் வரும் 14ம் தேதியும், துபாயில் வரும் 21ம் தேதியும் இசைக்கச்சேரி நடத்துவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் இசைக்கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் : இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 'சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கோல்கட்டாவில் நடக்கவிருந்த கச்சேரியை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நம் நாட்டில் மட்டுமின்றி, இந்த உலகிலுள்ள அனைத்துப் பெண்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன். எனது இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.