பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

ஒரு காலத்தில் நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து ஆகியோரின் காமெடி படங்களில் பட்டயகிளப்பியது. இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பிரச்னைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கி தந்ததாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிங்கமுத்துவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் சமீபத்தில் வடிவேலு தொடர்ந்தார். அதில் கடந்த பிப்ரவரியில் ஒரு யு-டியூப் சேனலில் சிங்கமுத்து தன்னை அவதூறாக தரக்குறைவாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். எனவே சிங்கமுத்து எனக்கு ரூ. 5 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டும், என்னைப்பற்றி அவர் பேச தடை விதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இருவாரங்களுக்குள் சிங்கமுத்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் அவகாசம் அளித்து இருந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் இரண்டு வாரகால அவகாசம் அவருக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.