'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

ஒரு காலத்தில் நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து ஆகியோரின் காமெடி படங்களில் பட்டயகிளப்பியது. இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பிரச்னைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கி தந்ததாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிங்கமுத்துவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் சமீபத்தில் வடிவேலு தொடர்ந்தார். அதில் கடந்த பிப்ரவரியில் ஒரு யு-டியூப் சேனலில் சிங்கமுத்து தன்னை அவதூறாக தரக்குறைவாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். எனவே சிங்கமுத்து எனக்கு ரூ. 5 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டும், என்னைப்பற்றி அவர் பேச தடை விதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இருவாரங்களுக்குள் சிங்கமுத்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் அவகாசம் அளித்து இருந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் இரண்டு வாரகால அவகாசம் அவருக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.




