பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட், திருமணத்திற்குப் பின்பு போட்டோஷுட் போக தாய்மை அடைந்து குழந்தை பெறுவதற்கு முன்பாக 'பிரக்னன்சி' போட்டோஷுட் நடத்துவதும் தற்போது 'பேஷன்' ஆகிவிட்டது. சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கூட இப்படி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோனே, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தீபிகாவின் தாய்மை பற்றி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட தீபிகா கலந்து கொண்டார். அவரது 'பேபி பம்ப்' புகைப்படத்தை எடுக்க பாலிவுட் புகைப்படக் கலைஞர்கள் பெரிதும் பிரயத்தனப்பட்டார்கள்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தீபிகாவின் கர்ப்பகால புகைப்பட போட்டோஷுட் ஒன்றை நடத்தி பல புகைப்படங்களை தீபிகா, ரன்வீர் ஜோடி வெளியிட்டுள்ளது. பல சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதக் கடைசியில் தீபிகாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தகவல். இன்ஸ்டாவில் நேற்றிரவு அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் 50 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளன.