சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய். தமிழகம், கேரளம் என இரண்டு மாநிலங்களிலும் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம் உண்டு. தெலுங்கிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சமீப காலங்களில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
தமிழகத்தில் எந்த ஒரு பொது இடத்திற்கும் விஜய்யால் போக முடியாத ஒரு சூழல் உள்ளது. அப்படி அவர் சென்றால் எண்ணற்ற ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வதால் அவர் அதிகம் வெளியில் வருவதில்லை. இந்நிலையில் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து அவர் 'சலார்' படம் பார்த்த தகவல் வெளியாகி உள்ளது.
'தி கோட்' படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்த போது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 'சலார்' படம் வெளியானது. அந்தப் படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு 'மாஸ்' தியேட்டரில் சாதாரண டிக்கெட்டில் விஜய் படம் பார்த்தார் என்ற தகவலை நடிகர் வைபவ் வெளியிட்டுள்ளார். அப்படி படம் பார்த்தால்தான் 'வைப்' ஆக இருக்கும் என விஜய் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இது பற்றி விஜய் படம் பார்த்த சிறு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர் ஒருவர், “எர்ரகட்டா, கோகுல் 70எம்எம் தியேட்டரில் விஜய் சார் 'சலார்' படத்தைப் பார்த்தார் என்று சுற்றி வரும் செய்தி உண்மையானதுதான். அவரது தனிப்பட்ட உரிமைக்காக நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதை மதித்து நாங்களும் அமைதியாக இருந்தோம். அவர் படம் முடிந்து சென்ற போது எங்களைப் பார்த்து கையசைத்தார். அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது,” என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.