பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது நள்ளிரவு காட்சிகள், அதிகாலை காட்சிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசின் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ம் வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது சென்னையில் படம் பார்க்க வந்த 19 வயது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு அதிகாலை காட்சிகள், காலை 7 மணி, 8 மணி காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் விஜய் நடித்து இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் கோயம்பத்தூரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காலை 7 மணிக்கும், 7.40 மணிக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் அந்த காட்சிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த இடத்திலும் இப்படியான முன்பதிவு நடைபெறவில்லை. அப்படியிருக்க அந்த குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் எந்தவிதமான அரசு அனுமதி பெற்று இப்படி முன்பதிவு செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.