பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மும்பையில் அயூப் கான் ஏற்பாடு செய்த முதல் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பூனம் தில்லான், போமன் இரானி, யஷ்பால் சர்மா, மேகா ரே, ரவி கோசைன், அனுப் சோனி, ஏக்தா ஜெயின், ராஜேஷ் தெலாங், சையத் அகமது மற்றும் அயூப் கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தர்மாராவ் பாபா அத்ரம் , மாஸ்டர் பீஸ், தி இமாம், தாதா லக்ஷ்மி, நனீரா, அவதாரி, புரமோஷன், ராஜ் கபூர் லூனி ட்யூன்ஸ், பாஸ், அந்தர்நாடு, பிளாக் காபி, எண்ட் இஸ் பிகினிங், டிப்ரஷன், லாஸ்ட் சீன், பிரேக் தி சைலன்ஸ் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன. இதில் டிவி நடிகை மேகா ரேயின் முதல் குறும்படமான ‛மாஸ்டர் பீஸ்' திரைப்படம் தான் அதிகம் பேசப்பட்டன. போட்டோகிராபியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படம் ஓடிடி தளங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது.
இது பற்றி மேகா ரே கூறுகையில், ‛‛மாஸ்டர் பீஸ் ஓடிடி.,க்காக உருவாக்கப்பட்டாலும், பெரிய திரையில் அதை பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு பெருமையான தருணம். இது ஒரு ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞரின் கதை'' என்றார்.