ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் மற்ற ஆண்களால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து படக்குழுவில் உள்ள முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்தாலும் அதனால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வரலாம் என அது குறித்து பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் அப்படி ஒரு நடிகர் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதை பார்த்த படத்தின் இயக்குனர் அந்த நடிகரை படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்த நிகழ்வும் நடந்து தான் இருக்கிறது.
இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 2018 படத்தின் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் தான். மலையாள திரையுலகில் பெண்கள் அதிக அளவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்படுவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை வரவேற்று கருத்து கூறியுள்ள பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர், ‛‛நான் இயக்கிய 2018 படத்தில் இதே போன்ற ஒரு நடிகர் படத்தில் நடித்த ஒரு நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டபோது அவரை உடனடியாக படத்திலிருந்து தூக்கினேன். அவர் நடித்த காட்சிகளையும் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கினேன். நீங்கள் இப்போது அந்த படத்தை பார்த்தீர்கள் என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒரு கதாபாத்திரத்தின் கன்டினிட்டி மிஸ் ஆகி இருப்பதை கவனிக்க முடியும். அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது” என்று கூறியுள்ளார்.