நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, எம்ஜி. ஆர், டி.எஸ்.பி போன்ற படங்கள் தோல்வியை தழுவியன. இதனால் இவருக்கு கால்ஷீட் தர எந்த முன்னனி ஹீரோக்களும் முன்வரவில்லை.
இந்த நிலையில் பொன்ராம் அடுத்து இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார். சரத்குமார் மறைந்த நடிகர் விஜயகாந்துடன், 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்', 'சந்தன காற்று' போன்ற படங்களில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இதன் கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. நேற்றுமுன்தினம் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தை பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.