கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, எம்ஜி. ஆர், டி.எஸ்.பி போன்ற படங்கள் தோல்வியை தழுவியன. இதனால் இவருக்கு கால்ஷீட் தர எந்த முன்னனி ஹீரோக்களும் முன்வரவில்லை.
இந்த நிலையில் பொன்ராம் அடுத்து இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார். சரத்குமார் மறைந்த நடிகர் விஜயகாந்துடன், 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்', 'சந்தன காற்று' போன்ற படங்களில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இதன் கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. நேற்றுமுன்தினம் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தை பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.