மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 2021ம் ஆண்டு நேரடியாகவே ஓடிடி.,யில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கள் நிலவின. ஆனால் எதிர்பார்த்தபடி விருது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அது குறித்து பா.ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதேசமயம் படத்தின் இரண்டாம் பகுதி சரி இல்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். சில விழாக்களில் கிரிட்டிக்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதை பெற்றால் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும். ஆனபோதும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. காரணம் திட்டமிட்டு சிலர் எனது வேலையை மதிக்கக்கூடாது என்று புறக்கணிக்கிறார்கள். என் மீதான வெறுப்பை தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது'' என்று தெரிவித்திருக்கிறார் பா. ரஞ்சித்.