பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
முன்னணி மலையாள நடிகரான சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி.ஆனார். இது பாரதிய ஜனதா கட்சி கேரளாவிற்குள் பலம் பெறுவதற்கு வழியாக அமைந்தது. இதற்கான பரிசாக பாரதிய ஜனதா அரசு அவரை மத்திய அமைச்சராக்கியது.
இந்நிலையில் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி “அமைச்சர் பதவியை விட எனக்கு சினிமாதான் பெரிது. சினிமாவுக்காக அமைச்சர் பதவியை இழகத் தயார்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது “எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமாதான் முக்கியம். 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார்.
சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி 'ஒற்றக்கொம்பன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்”என்று பேசி உள்ளார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.