மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் |

முன்னணி மலையாள நடிகரான சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி.ஆனார். இது பாரதிய ஜனதா கட்சி கேரளாவிற்குள் பலம் பெறுவதற்கு வழியாக அமைந்தது. இதற்கான பரிசாக பாரதிய ஜனதா அரசு அவரை மத்திய அமைச்சராக்கியது.
இந்நிலையில் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி “அமைச்சர் பதவியை விட எனக்கு சினிமாதான் பெரிது. சினிமாவுக்காக அமைச்சர் பதவியை இழகத் தயார்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது “எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமாதான் முக்கியம். 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார்.
சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி 'ஒற்றக்கொம்பன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்”என்று பேசி உள்ளார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




