ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் ரவி மோகன் தற்போது ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கராத்தே பாபு எனும் அரசியல் கலந்த படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை ரவி மோகனே தான் துவங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க போவதாக தெரிகிறது. இது இரண்டு ஹீரோ கொண்ட படமாம். ஒரு ரோலில் ரவி மோகனும், இன்னொரு முக்கிய ரோலில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளார். இதுவரை ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவில்லை. இந்தப்படம் மூலம் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். தொடர் தோல்விகளால் தவித்து வரும் ரவி மோகனுக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன்.