இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் |

நடிகர் ரவி மோகன் தற்போது ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கராத்தே பாபு எனும் அரசியல் கலந்த படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை ரவி மோகனே தான் துவங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க போவதாக தெரிகிறது. இது இரண்டு ஹீரோ கொண்ட படமாம். ஒரு ரோலில் ரவி மோகனும், இன்னொரு முக்கிய ரோலில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளார். இதுவரை ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவில்லை. இந்தப்படம் மூலம் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். தொடர் தோல்விகளால் தவித்து வரும் ரவி மோகனுக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன்.