திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
நடிகர் ரவி மோகன் தற்போது ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கராத்தே பாபு எனும் அரசியல் கலந்த படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை ரவி மோகனே தான் துவங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க போவதாக தெரிகிறது. இது இரண்டு ஹீரோ கொண்ட படமாம். ஒரு ரோலில் ரவி மோகனும், இன்னொரு முக்கிய ரோலில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளார். இதுவரை ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவில்லை. இந்தப்படம் மூலம் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். தொடர் தோல்விகளால் தவித்து வரும் ரவி மோகனுக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன்.