பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
நடிகர் ரவி மோகன் தற்போது ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கராத்தே பாபு எனும் அரசியல் கலந்த படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை ரவி மோகனே தான் துவங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க போவதாக தெரிகிறது. இது இரண்டு ஹீரோ கொண்ட படமாம். ஒரு ரோலில் ரவி மோகனும், இன்னொரு முக்கிய ரோலில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளார். இதுவரை ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவில்லை. இந்தப்படம் மூலம் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். தொடர் தோல்விகளால் தவித்து வரும் ரவி மோகனுக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன்.