நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இடையில் தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த பிரச்னைகளால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் முழு மூச்சாக படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' திரைப்படம் பிரசாந்தை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்பியது. இதனால் பிரசாந்த் மீண்டும் உற்சாகமாக உள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து ' தி கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் பேசியதாவது, " இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் மட்டும் நடிக்காமல் அனைத்து இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் "என பேசியுள்ளார்.