அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
மலையாள நடிகை நஸ்ரியா கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக நடித்து வந்தார். நேரம், ராஜா ராணி, பெங்களூர் டேய்ஸ் என குறுகிய நாட்களிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிய இவர், நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணத்தில் இணைந்தனர். அதன் பிறகு நஸ்ரியா நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீப வருடங்களாக முக்கியமான சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாராகும் படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஹேர்கட் செய்துள்ள நஸ்ரியா அது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‛இப்படி ஹேர் கட் செய்த விஷயம் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான்.. என்னையோ அல்லது இந்த ஹேர் கட் செய்த தனசேகரனையோ கொன்றே விடுவார்' என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா.