திருமண செய்தி : திவ்யா ஸ்பந்தனா கோபம் | மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ் | 'லியோ 2, தி கோட் 2' - எதிர்காலத்தில் வருமா? | பவன் கல்யாண் நன்றிக்கு நன்றி தெரிவித்த சிம்பு | பிளாஷ்பேக் : வாய்ப்பளித்த எம்.ஜி.ஆர் ; வாழ்த்துப் பாடலால் நன்றி சொன்ன வாலி | டிரென்டிங் போட்டியில் 'மட்ட Vs மனசிலாயோ' | செப்டம்பர் 13, நாளை ஒரே ஒரு ரிலீஸ் | அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் படம் நிறைவு | பிளாஷ்பேக் : நான்கு காலகட்டங்களில் ரீமேக்கான படம் | சித்தர் வாக்குப்படி உருவான 'கடைசி உலகப் போர்' |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்திற்கும் இந்த படம் முதல் நாளில் 26.44 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கூறுகையில், ‛‛தங்கலான் படத்தை 100 பாகங்கள் கூட எடுக்க முடியும். உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால் நீங்கள் காட்டும் அன்புக்காக இரண்டாம் பாகத்தை உருவாக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பற்றி இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரிடத்தில் கலந்து பேசி உள்ளேன். ரஞ்சித் தனது அடுத்த படவேலைகளை முடித்துவிட்டு தங்கலான்-2 படத்தில் நடிக்க அழைத்தால் உடனே சென்று விடுவேன்,'' என்று கூறியுள்ளார் விக்ரம். இதன் மூலம் தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.