பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! |

இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் தீவிர அரசியலில் நுழைய இருப்பதால் விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படத்திற்கு முந்தைய படம்மாக இது உருவாகியுள்ளது. அதனால் இதை பார்த்து பார்த்து கவனமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
13 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தை வைத்து அவர் மங்காத்தா என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். அப்போது மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்புகளில் இருந்த விஜய் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் வெங்கட்பிரபு.
அந்த சமயத்திலேயே வெங்கட் பிரபுவிடம் அஜித் நீங்கள் விரைவிலேயே விஜய் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று கூறினாராம். ஆனால் அந்த வாய்ப்பு கையில் வந்து சேர்வதற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியுள்ள வெங்கட் பிரபு, கோட் படம் குறித்து அஜித் கூறிய விஷயம் ஒன்றையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இந்த கோட் திரைப்படம் மங்காத்தாவை விட 100 மடங்கு அதிகம் இருக்கும் விதமாக உருவாக்குங்கள் என்றும் விஜய் தீவிர அரசியலுக்குள் நுழைய இருப்பதால் அவரை திரையுலகில் இருந்து கம்பீர வெற்றியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அஜித் தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.




