பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா நடித்த வேடத்தில் நடித்திருக்கிறார். பேபி ஜான் என்ற பெயரில் உருவாகி உள்ள இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழில் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரகு தாத்தா என்ற படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்று திரைக்கு வந்துள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் அவ்வப்போது கதைகளை எழுதி வருகிறேன். டைரக்ஷன் துறையில் அனைத்து நுட்பங்களையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்தில் படங்கள் இயக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. குறிப்பாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன். அவருக்கான கதையை தயார் செய்து வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.