Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் | நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : 'தேவரா' விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு | நடிகைகள் குறித்து அவதூறு பேசும் காந்தாராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடிவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை | நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25வது ஆண்டை நிறைவு செய்யும் 'நீ வருவாய் என'

14 ஆக, 2024 - 12:23 IST
எழுத்தின் அளவு:
25-Years-Of-Nee-Varuvaai-Ena

தமிழ் சினிமாவில் சில படங்கள் மறக்க முடியாத படங்களாக இருக்கும். 90 கால கட்டங்களில் வந்த பல படங்களில் காதல் தான் முதன்மையானதாக இருந்தது. அப்படிப்பட்ட காதல் கதைகளில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை அன்றைய ரசிகர்கள் பார்த்தனர்.

காதல் படங்களாக இருந்தால், பாடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும். காதலும் மனதை மயக்குவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். அப்படி ஒரு படமாக வெளிவந்து அப்போது பேசப்பட்ட படம் 'நீ வருவாய் என'.

கண்கள் தானம் என்பது அப்போது பெரும் பாராட்டைப் பெற்ற ஒரு விஷயமாக இருந்தது. அதை மையப்படுத்திய கதைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு வேலைக்கு வருகிறார் பார்த்திபன். அவரைத் தேடி வந்து பார்த்து கண்ணும், கருத்துமாய் பார்த்துக் கொள்கிறார் தேவயானி. தன் மீதுள்ள காதலால்தான் தேவயானி அப்படி வந்து பழகுகிறார் என பார்த்திபன் நினைக்கிறார். அதனால், பெற்றோருடன் சென்று தேவயானியை பெண் கேட்கிறார். ஆனால், அவரோ நான் பார்த்திபனைக் காதலிக்கவில்லை, பார்த்திபனின் கண்களைத்தான் காதலிக்கிறேன் என்கிறார்.

தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இருந்த அஜித் விபத்தில் இறந்து போனது பற்றியும், அவரது கண்கள்தான் அதே விபத்தில் கண்களைப் பறி கொடுத்த பார்த்திபனுக்கு பொருத்தப்பட்டது என்பதைப் பற்றியும் சொல்கிறார். மனதை நேசிக்காமல் கண்களை மட்டுமே நேசித்த ஒரு பெண்ணின் காதல் என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இப்படியான காதல் கதையைக் கொடுத்த இயக்குனர் ராஜகுமாரன், பின்னர் தேவயானியைக் காதலித்து மணந்து கொண்டார் என்பது வேறு ஒரு நிஜக் கதை.

விஜய், அஜித் இணைந்து நடிக்க வேண்டிய ஒரு படம் இது. ஆனால், அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார். அதை மாற்ற விரும்பவில்லை இயக்குனர் ராஜகுமாரன். எனவே, படத்தில் நடிக்க மறுத்துள்ளார் விஜய். பின்னர்தான் பார்த்திபன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் அஜித்தின் அழகான நடிப்பு ரசிக்க வைத்த ஒன்று. பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா கதாபாத்திரங்களும் நிறைவாக அமைக்கப்பட்டவை.

பல சுவாரசியமான பார்த்திபன் 'டச்' கொண்ட காதல் வசனங்களும், எஸ்ஏ ராஜ்குமாரின் இசையில் அமைந்த இனிமையான பாடல்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. “பார்த்து பார்த்து கண்கள் பூத்ததடி...., ஒரு தேவதை வந்துவிட்டாள்... அதிகாலையில் சேவலை எழுப்பி..., பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா...'” ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள்.

1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த இந்தப் படம் குறைத்து மதிப்பிடப்பட்ட காதல் படங்களில் ஒன்று என தாராளமாகச் சொல்லலாம்.

இப்படத்தின் 25வது ஆண்டு போஸ்டரைப் பகிர்ந்த ரசிகர் ஒருவரின் பதிவிற்கு, “இந்தப் போஸ்டரை பார்க்கத் தோன்றியது… 25 வருடங்களில் தலைகீழ் மாற்றங்கள். தலைமேல் அண்ணாந்துப் பார்க்கும் வானமாய் Mr.Ajith. Proud of him!,” எனக் குறிப்பிட்டுள்ளார் படத்தின் நாயகன் பார்த்திபன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் பேச்சு - தனுஷின் பழைய வீடியோக்களை பதிவிடும் ரசிகர்கள்சிவகார்த்திகேயன் பேச்சு - தனுஷின் ... இன்று முதல் ஹிந்தி இந்தியன் 2 ஓடிடி தளத்தில்… இன்று முதல் ஹிந்தி இந்தியன் 2 ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in