Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'யாரைப்' பற்றிச் சொல்கிறார் சிவகார்த்திகேயன்

13 ஆக, 2024 - 03:14 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-tells-about-who

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயன் அவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில், பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 23ல் வெளியாக உள்ள படம் 'கொட்டுக்காளி'.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று(ஆக., 13) சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய போது, “கொட்டுக்காளி மாதிரி எஸ்கே புரொடக்ஷன்ஸ்ல இருந்து இன்னும் நிறைய படைப்புகள் வரும். நான் வந்து யாரையும் கண்டுபுடிச்சி, நான்தான் வாழ்க்கை கொடுத்தேன், இவங்களை நான்தான் ரெடி பண்ணேன் அந்த மாதிரிலாம் நான் சொல்ல மாட்டேன். ஏன்னா என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க, நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு. அந்த மாதிரி ஆள் நான் இல்ல,” என்று பேசினார். அவரது இந்த வீடியோவை மட்டும் தனியாக 'கட்' செய்து சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரப்பி வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த 'மெரினா' படத்தில் சிவகார்த்திகேயன் அறிமுகமானாலும், அடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், 'எதிர் நீச்சல்' படம்தான் அவருக்கு தனி ஹீரோவாக முதல் பெரிய வெற்றியைத் தந்தது. அந்தப் படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் இன்றைய பேச்சில் அவர் யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் புரிந்து அதை பலவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ், மலையாளம் என பிரித்து பார்ப்பது இல்லை : நிமிஷா சஜயன்தமிழ், மலையாளம் என பிரித்து ... 600 மில்லியனைக் கடந்த 'எனிமி' படத்தின் 'டம் டம்' பாடல் 600 மில்லியனைக் கடந்த 'எனிமி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
13 ஆக, 2024 - 07:08 Report Abuse
KayD படிச்சவன் பேசினால் அது உண்மை சரியா தான் இருக்கும். படிக்காதவன் பேசினால் அது சொல்லி கொடுத்த வசனமா தான் இருக்கும். சமீபத்தில் ஒரு ஹீரோ ஆடியோ லான்ச் ல ஒரு நாள் னு அரங்கம் அதிர சொல்லுவார் .. புலிய பாத்து பூனை சூடு போட்டிக்கிச்சாம் அந்த கதையா இல்லை இருக்கு. .. நடிக்க வந்து இருக்கேங்க. உழைங்க நல்ல படம் கொடுங்க பார்க்க நாங்க தயார். அத விட்டுட்டு அவன் பெருசா நான் பெருசா அவனை காய் பிடிச்சி தூக்கி விட்டான் நான் அவன் கால் பிடிச்சி வந்தேன் னு சொல்றது விட உங்களுக்கு திறமை இருக்கு. திரையில் காட்டுங்க உங்க திறமையை
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
14 ஆக, 2024 - 09:08Report Abuse
angbu ganeshயாரு அனிலதானே சொல்றிங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in