Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ், மலையாளம் என பிரித்து பார்ப்பது இல்லை : நிமிஷா சஜயன்

13 ஆக, 2024 - 03:05 IST
எழுத்தின் அளவு:
There-is-no-separation-between-Tamil-and-Malayalam:-Nimisha-Sajayan

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை நிமிஷா சஜயன். தற்போது தமிழ் சினிமாவிலும் ஆழமாக கால் பதித்து வருகிறார். 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களில் நடித்த அவர் அடுத்து நடிக்கும் புதிய படம் 'என்ன விலை'. மலையாள இயக்குனர் சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்குகிறார். கருணாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், விஜயலட்சுமி, பசுபதி ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆல்பி ஆண்டனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் சஜீவ் பழூர் கூறும்போது, “என்ன விலை படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். குறிப்பாக, நிமிஷா சஜயன் போன்ற திறமையான பல நடிகர்கள் படத்தில் இருப்பதால் படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன், நிமிஷா உடன் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' என்ற படத்தில் வேலை பார்த்துள்ளேன். ஆனால் இப்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இரண்டிலுமே அவரது பேக்-டு-பேக் ஹிட் கொடுத்து நடிகையாக அவர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான மற்றும் புதிய நிமிஷாவைக் காண்பிக்கும். முதல் ஷெட்யூல் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும்" என்றார்.

நிமிஷா கூறுகையில், ‛‛சஜீவ் உடன் தான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறேன். ஒரு பார்வையாளராக நானும் அவரது படத்தை காண ஆவலாய் உள்ளேன். இந்த படத்தில் நடிக்க காரணமே கதை தான். அதற்கு வலு சேர்க்கும் விதமாக எனது வேடம் அமைந்துள்ளது. படத்தில் எனக்கு அதிகமான வசனங்களும் உள்ளன. எனது கேரக்டர் பார்வையாளர்களுடன் ஒத்துப்போகும். தமிழ் சினிமாவில் இப்போது ஜாலியாக இருக்கிறேன். எனக்கு பலவிதமான கேரக்டர்கள் கிடைக்கின்றன. தமிழ், மலையாளம் என நான் பிரித்து பார்ப்பது இல்லை. என்னை பொருத்தவரையில் மக்கள் ஏதாவது புதிதாக வேண்டும் என நினைக்கிறார்கள். மொழியை பார்ப்பது இல்லை'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளியாகும் புதிய ஏலியன் படம்தமிழில் வெளியாகும் புதிய ஏலியன் படம் 'யாரைப்' பற்றிச் சொல்கிறார் சிவகார்த்திகேயன் 'யாரைப்' பற்றிச் சொல்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in