Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியத் திரையுலகின் இணையற்ற 'கலையுலக ராணி' ஸ்ரீதேவி

13 ஆக, 2024 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Sridevi-is-the-incomparable-Queen-of-the-Arts-of-Indian-cinema

“மூன்று முடிச்சு”கள் இட்டு திரையுலகில் நாயகியாய் நுழைந்து, “16 வயதினிலே” பலரும் பாராட்டும் பைந்தமிழ் நாயகியாக உருமாறி, “மூன்றாம் பிறை”யாய் வளர்ந்து, இந்தியத் திரையுலகின் முழு நிலவாய் பரிணமித்த முத்தான நாயகி நடிகை ஸ்ரீதேவியின் 61வது பிறந்த தினம் இன்று…

தமிழ் நாட்டில் சிவகாசிக்கு அருகில் உள்ள மீனம்பட்டி என்ற சிற்றூரில், அய்யப்பன் யாங்கர் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகளாக, 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பிறந்தார் ஸ்ரீதேவி. இவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா அய்யப்பன்.

நடிகை ஸ்ரீதேவி தனது இயல்பான, குறும்புத்தனமான, அழுத்தமான மற்றும் கவர்ச்சியான நடிப்பால் மட்டுமின்றி, தனது அழகாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பால் ஈர்க்கச் செய்த ஒரு ஆற்றல் மிகு நடிகையாகவும், கலையுலக ராணியாகவும் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா உலகில் கோலோச்சி இருந்தவர்.

கதாநாயகர்களை நம்பி, அவர்களது ஆதிக்கம் மேலோங்கி, அவர்களின் கைகளில் இருந்த திரையுலகை நாயகியின் பக்கம் திரும்பச் செய்து, நாடே போற்றும் நல்லதொரு நடிகை என்றும், பாலிவுட் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்ற நடிகையாய் அறியப்படுபவர்தான் ஸ்ரீதேவி.

“ராணி மேரா நாம்”, “ஜுலி” ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், 1979ல் “16 வயதினிலே” திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பான “சோல்வா சாவன்” என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தார்.

1983வரை தமிழில் பிஸியான, நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த போதே, ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தலானார் ஸ்ரீதேவி. அதன்படி நடிகர் ஜீதேந்திராவுடன் இவர் இணைந்து நடித்து, 1983ல் வெளிவந்த “ஹிம்மத்வாலா” என்ற திரைப்படமும் இவருக்கு இமாலய வெற்றியைத் தர, ஹிந்தி திரையுலகில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் ஸ்ரீதேவி.

வைஜெயந்திமாலா, வஹிதா ரஹ்மான், ஹேமாமாலினி, ரேகா என திறமையான பல நடிகைகள் தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று, தங்களது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் அங்கே கோலோச்சியிருந்திருந்தாலும், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற தனிப்பெரும் அந்தஸ்தினைப் பெற்று, ஒரு ஆற்றல்மிகு நடிகையாகப் பார்க்கப்பட்டார்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 14 திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், அவரின் ஜோடியாக மட்டும் 9 படங்களில் நடித்திருக்கின்றார். நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து நடித்த 13 திரைப்படங்களில், “மனிதரில் இத்தனை நிறங்களா” திரைப்படம் தவிர, மற்ற அனைத்து திரைப்படங்களிலும் அவருடைய ஜோடியாகவே நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.

தனது திருமணத்திற்குப் பின் முற்றிலும் சினிமா உலகை விட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்குப் பின், 2012ம் ஆண்டு வெளிவந்த “இங்கிலீஷ் விங்கிலீஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு மறுபிரவேசம் செய்தார். 2017ல் வெளிவந்த “மாம்” என்ற திரைப்படம்தான் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த கடைசி திரைப்படம். 2015ம் ஆண்டு வெளிவந்த “புலி” திரைப்படம்தான் இவர் தமிழில் நடித்திருந்த கடைசி திரைப்படம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான தனது கலையுலகப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 275 திரைப்படங்கள் நடித்து, இந்திய அரசின் உயரிய விருதான “பத்மஸ்ரீ விருது” உட்பட எண்ணிலடங்கா ஏனைய விருதுகள் பல வென்று, கலையுலகிற்கே காலத்தை அற்பணித்து, கரைந்து போன காவிய நாயகிதான் நடிகை ஸ்ரீதேவி.

கலையுலகை மறந்து, நிலையில்லா புவி வாழ்வை துறந்து, நித்திரை கொண்ட சித்திரை நிலவு, இங்கு பதித்துச் சென்ற முத்திரைகள்தான் ஏராளம்! ஏராளம்!! என கூறி, கலையுலக தாரகை நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கங்குவா' டிரைலர் : சூர்யாவுக்கு புதிய 24 மணிநேர சாதனை'கங்குவா' டிரைலர் : சூர்யாவுக்கு ... “பார்த்திபன் கனவு” கண்ட 'பரதக்கலை நாயகி' வைஜெயந்திமாலா “பார்த்திபன் கனவு” கண்ட 'பரதக்கலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s sambath kumar - chennai,இந்தியா
14 ஆக, 2024 - 06:08 Report Abuse
s sambath kumar ஹிந்தி திரையுலகம் மிகவும் கேவலமானது, பாதுகாப்பற்றது. ஹிந்தியில் நடிக்கவேண்டாம், என்று குறிப்பிட்ட சிலர் சொல்லியதை அவர் பொருட்படுத்தவில்லை. பணமும்,புகழும்,போதையும் ஒரு நல்ல நடிகையை அநியாயமாக கொன்றுவிட்டது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in