கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தமிழில் அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தேவதாஸ்' பட நடிகரான நாகேஸ்வர ராவ் பேரன், 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்த நடிகர் நாகார்ஜூனாவின் மகன், 'கஸ்டடி' படத்தில் நடித்தவர் நாக சைதன்யா. இவருக்கும் சென்னையைச் சேர்ந்தவரும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தாவும் சில வருடங்கள் காதலித்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நான்கு வருடங்களிலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.
நாக சைதன்யாவுக்கும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த சோபிதா துலிபலாவுக்கும் இடையே சில வருடங்களாகக் காதல் என பேசப்பட்டது. இருவரும் வெளிநாடுகளில் சுற்றி வந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், இருவருமே அவர்களது காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லவேயில்லை.
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா ஆகிய இருவருக்கும் ஐதராபாத்தில் நாகார்ஜூனாவின் இல்லத்தில் இன்று(ஆக., 8) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள்.
நாக சைதன்யா, சோபிதா நிச்சய போட்டோவை பகிர்ந்து நாகார்ஜூனா வெளியிட்ட பதிவில், ‛‛எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபலாவுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். துலிபலாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பாராக!"
8.8.8
எல்லையற்ற அன்பின் ஆரம்பம்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.