ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பாரீஸில் நடந்தும் வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய இந்தியாவின் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறிய நிலையில் அவர் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், ‛‛சில நேரங்களில் உறுதியான நபர்களும் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனி ஆள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் வினேஷ் போகத். உங்களுக்கு மேலே ஒரு சக்கதி பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கடினமான சூழலிலும் உங்களின் அசாத்திய திறமை போற்றத்தக்கது. உங்கள் ஏற்ற, இறக்கங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் எப்போதும் உடன் உறுதுணையாக இருப்போம்'' என தெரிவித்துள்ளார்.