மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கன மழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச சுற்றுலாத்தளமான வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இழப்பு என மாநிலங்களைக் கடந்தும் துயரத்தை உணர வைத்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் உதவிகளை அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்களான விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, நயன்தாரா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பஹத் பாசில், நஸ்ரியா, டொவினோ தாமஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலரும் நிதியுதவி குறித்து அறிவித்துள்ளனர்.
ஆனால், கேரளாவில் அதிக வசூலைப் பெறும் சில முன்னணி தமிழ் நடிகர்கள், மற்ற மொழி நடிகர்கள் இன்னும் எந்தவிதமான நிதியுதவியையும் அறிவிக்காதது குறித்தும் சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இரங்கல் சொல்வது மட்டும் தீர்வல்ல, முடிந்தவரையில் ஏதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.
என்ன இயற்கை பேரிடர் நடந்தாலும் சிலர் கண்டு கொள்ளாமல் இருப்பதும், சிலர் உதவி செய்தாலும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதும் திரையுலகத்தில் நடந்து வருகிறது.