காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
விலங்குகளை வைத்து படம் இயக்கி பிரபலமான ராம நாராயணன் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான படம் 'ஆடிவெள்ளி'. சீதா, நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர். யானையொன்றும், பாம்பொன்றும் நடித்தது. படத்தில் யானைக்கு 'வெள்ளிக்கிழமை ராமசாமி' என்று பெயரிட்டிருந்தார்கள். சங்கர்-கணேஷ் இசை அமைப்பில் பாடல்கள் ஹிட்டாகின. மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். காமெடியும், ஆன்மிகமும் கலந்து உருவான படம்.
இந்த படம் தற்போது பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் ரீமேக் ஆகிறது. ராம.நாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்.ராமசாமியின் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. உலகில் தீயசக்திகள் வீறுகொண்டு எழும்போது, தெய்வீக சக்தி விழித்துக் கொள்கிறது என்ற கருத்துடன் உருவாக்கப்படும் இந்த படத்தை பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி, ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களை இயக்கிய பி.வி.பரணிதரன் இயக்குகிறார்.
'ராம.நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற அறிவிப்புடன் வெளியாகும் இப்படத்தில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. 'ஜங்கிள் புக்' படத்துக்கு அகாடமி விருது வென்றிருக்கும் சிஜி நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.